மெட்ராஸ் கபே ... நேர்மையான ஒரு ராணுவ அதிகாரியின் துப்பறியும் கதை . ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு ஹிந்தி படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் . செம த்ரில்லர் படம் .
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
படத்தை பற்றி ஏராளமான controversyக்கள் இருப்பதால் அதை பற்றின கருத்துக்களை கடைசியில் சொல்கிறேன் .
ஆரம்பம் முதல் படம் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது . இந்திய RAW அதிகாரி ஜான் ஆப்ரஹாம் . இலங்கையில் இந்திய படைகளின் தோல்விக்கு சில தேச துரோகிகள் காரணமாக இருக்கிறார்கள் . அதை கண்டு பிடிக்கவும் , சில சர்வதேச காரணங்களுக்காகவும் ஜான் ஆப்ரஹாம் இந்தியாவில் இருந்து இலங்கை அனுப்ப படுகிறார் . அங்கு அவர் நடத்தும் விசாரணைகள் அவரை எங்கெல்லாமோ கொண்டு செல்கிறது . அதனால் அவர் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் போன்றவையே படம் .
படத்தின் மிக பெரிய வெற்றியே கதை சொல்லப்பட்ட விதம் தான். படத்தின் கதை நம் முன்னாள் பிரதமரின் கொலை பற்றியது . ஏற்க்கனவே பல மொழிகளில் பலவாறு பிரித்து மேயப்பட்ட கதை . இருந்தும் படம் செம்ம விறுவிறுப்புடன் செல்ல காரணம் படம் சொல்லப்பட்ட point of view . கதை முழுக்க முழுக்க ஒரு RAW அதிகாரியின் பின்னாலேயே செல்கிறது . நம் எல்லோருக்கும் இலங்கையில் நடந்து போர் பற்றி தெரியும் . அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் தெரியும் . அது எப்படி நடந்தது என்றும் பார்த்துள்ளோம் . இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கொலையாளிகள் வாயிலாக பார்த்தல் தானே எந்த சஸ்பென்சும் இல்லாமல் சப்பையாக இருக்கும் . ஆனால் ஒரு கொலை நடக்கப்போகிறது என்றே தெரியாமல் வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக வந்த ஒருவர் படிப்படியாக அந்த கொலையை பற்றி தெரிந்து கொள்ளும் போது நமக்கும் அந்த திரில் ஒட்டிக்கொள்ளும் தானே . அது தான் திரைக்கதையின் வெற்றி . கொலைக்கான காரணங்களை வெறுமனே உணர்வு ரீதியாக ப்ரெசண்ட் செய்யாமல் நிஜமாகவே இதன் பின்னால் ஒளிந்து இருக்கும் சர்வதேச அரசியலை தைரியமாகவும் , தெளிவாகவும் , விறுவிறுப்புடனும் திரையில் கொண்டுவந்த இயக்குனர் சூஜித் சிர்க்காருக்கு hats off . படம் ஆரம்பம் முதலே ராஜீவ் கொலைக்கு எத்தனை நாள் முன்பு நடக்கிறது என்பதை வைத்து தான் விளக்கப்படுகிறது . இருந்தாலும் பாதி படத்திற்கு பிறகுதான் நாம் கொலைக்கான காரணங்களுக்கே வருகிறோம் . அதாவது நாம் எதை மனதில் வைத்து கதையுடன் பயணிக்கிறோமோ , அதையே மறக்கடிக்கசெய்து , நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த விஷயத்திற்கு திருப்பி கொண்டு வருகிறார்கள் . எனவே நமக்கு பழக்கப்பட்ட கதையை பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் புதிய திரில்லர் பார்ப்பது போல் உள்ளது . அதே போல் எதிரிகளின் இன்டர்செப்டுகளை, டீகோட் செய்யும் இடங்களும் செம இன்டலிஜென்ஸ் ... சோம்நாத் டே , சுபெண்டு பட்டாச்சார்யா வின் திரைக்கதை அவ்வளவு பவர்புல் .
ஜான் ஆபிரகாம் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு . எந்த நேரத்திலும் அசராமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய துடிக்கும் அதிகாரியாக வருகிறார் . அந்த இடம் , இந்த இடம் என்றில்லாமல் எல்லா படம் முழுக்கவே இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார் . ஆனால் படத்திலேயே சிறந்த நடிப்பு பாலா கதாபத்திரதினுடையது தான் . பிரகாஷின் அருமையான நடிப்பு. முக்கியமாக தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் செம்ம கெத்து . ஜானின் மேலதிகாரியும் ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு அழும் அந்த காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார் .
படத்தில் இடம் சார்ந்த detailing அவ்வளவு நேர்த்தியாக உள்ளது . LTF (Lankan Tamil Front )ன் பேஸ் கேம்ப் செல்லும் வழி எல்லாம் நிஜமாகவே காட்டிற்கு செல்லும் feelling கொடுக்கிறது . யாழ்பாணம் , சென்னை , மதுரை , லண்டன் , சிங்கப்பூர் என பறந்து பறந்து செல்லும் கதையில் எங்குமே சிறிதும் குழப்பம் இல்லாமல் நம்மால் கதையுடன் பயணிக்க முடிகிறது .
மிகவும் கவனிக்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒளிப்பதிவு . ஒளிப்பத்வாளர் கமல்ஜீத் நேகி படத்தின் இந்த டோனை கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளார் . அதிலும் ஆரம்பத்தில் வரும் அந்த போர் காட்சிகள் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது . படத்தில் பாடல்கள் திணிக்கபடாதது பெரும் சந்தோஷம் , எப்படி பட்ட பாடலாக இருந்தாலும் இந்த படத்தில் அது ஸ்பீட் ப்றேக்கராகவே இருந்திருக்கும் . ஆனால் பின்னணி இசை சில இடங்களில் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கலாம் .
படத்தில் நான் காணும் சில குறைகளும் உள்ளன . மொழி சார்ந்த detailing படத்தில் மிகவும் மோசம் . நன்றாக ஹிந்தி பேசும் ஈழத்தமிழர்கள் யாருமே ஈழத்தமிழ் பேசவில்லை . கொலையாளிகள் தங்கி இருக்கும் அந்த வீட்டில் அவர்கள் பேசும் சில டயலாக் ஈழத்தமிழ் தானா , இல்லை மலையாளமா என்று சந்தேகமாக உள்ளது . அதே போல் கதை நடப்பது 1990களின் தொடக்கம் . ஜான் ஒரு பெட்டிக்கடையில் நின்று பேசும்போது அங்கு ஒரு குமுதம் சிநேகிதி இதழ் தொங்க விடப்பட்டுள்ளது . அதன் அட்டையில் நடிகை சிநேகா படம் உள்ளது . சிநேகா 2001ம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் வந்த "விரும்புகிறேன் " படத்தில் அல்லாவா அறிமுகம் ஆனார் . .... இது போன்ற சின்ன சின்ன தவறுகள் வராமல் பார்த்திருக்கலாம் . என்ன இருந்தாலும் செம்மையான த்ரில்லர் படம் . டிக்கட் காசு வீணாக போகாது ..
படம் பற்றின controversyக்கள் . . .
படத்தில் யாரை பற்றியும் திணிக்கப்பட்ட சித்தரிப்புகள் இல்லை என்றே எனக்கு தோன்றியது .
கிளைமாக்சில் ஜான் ரபீந்தரநாத் தாகூரில் கீழ்கண்ட வரிகளை சொல்கிறார் .
" Where the mind is without fear and the head is held high
Where knowledge is free Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake "
மொழி பற்றின குறுகிய உணர்வில்லாமல் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்று வாழ்பவர்களுக்கு இந்த படத்தை எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதே என் கருத்து