Friday 4 October 2013

VIKATAN MARKS ( ? / 100 )






விகடன் மதிப்பெண்கள் 

28 மதிப்பெண்கள் :-
   
    *மாயாண்டி

36 மதிப்பெண்கள் :-

    *மேதை

37 மதிப்பெண்கள் :-

    *அன்னக்கொடி

    *அலெக்ஸ் பாண்டியன்
 
    *மூன்று பேர் மூன்று காதல்

    *தேசிங்கு ராஜா

    *சுறா

38 மதிப்பெண்கள் :-

    *சொன்னா புரியாது

    *பட்டத்து யானை

    *முத்திரை

    *போட்டா போட்டி

    *வெளுத்துக்கட்டு

39 மதிப்பெண்கள் :-

    *தாம் தூம்

    *அம்மாவின் கைபேசி

    *குட்டிப்புலி

    *வித்தகன்

    *உயர்திரு 420

    *அம்பாசமுத்திரம் அம்பானி

    *வெடி

40 மதிப்பெண்கள் :-

    *அமீரின் ஆதி பகவன்

    *தாண்டவம்

    *நீதானே என் பொன்வசந்தம்

    *நியூட்டனின் மூன்றாம் விதி

    *சகுனி

    *கிருஷ்ணவேணி பஞ்சாலை

    *லீலை

    *மை

    *டூ

    *காதல் சொல்ல வந்தேன்

    *வனயுத்தம்

    *எத்தன்

    *மகிழ்ச்சி

41 மதிப்பெண்கள் :-

    *ஜெயம் கொண்டான்

    *தில்லு முல்லு

    *முகமூடி

    *துரோகி

    *கடல்

    *கேடி பில்லா கில்லாடி ரங்கா

    *கலகலப்பு

    *வருத்தப்படாத வாலிபர் சங்கம்

    *ஐந்து ஐந்து ஐந்து

    *தில்லாலங்கடி

    *யுத்தம் செய்

    *வெங்காயம்

    *மயக்கம் என்ன

    *இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்

    *கோரிப்பாளையம்

    *குள்ளநரிக்கூட்டம்

    *பொன்னர் சங்கர்

    *நகரம் மறுபக்கம்

42 மதிப்பெண்கள் :-

    *மனம் கொத்தி பறவை

    *வத்திக்குச்சி

    *பாஸ் [எ] பாஸ்கரன்

    *போடா போடி

    *பச்சை என்கிற காத்து

    *மங்காத்தா

    *தீக்குளிக்கும் பச்சை மரம்

    *மாற்றான்

    *கண்ணா லட்டு தின்ன ஆசையா

    *சமர்

    *ஆதலால் காதல் செய்வீர்

    *தலைவா

    *ராட்டினம்

    *3

    *வம்சம்

    *காஞ்சனா

    *ரௌத்திரம்

    *அனந்தபுரத்து வீடு

    *முரண்

43 மதிப்பெண்கள் :-

    *சுண்டாட்டம்

    *தீயா வேலை செய்யணும் குமாரு

    *ஒரு கல் ஒரு கண்ணாடி

    *சிங்கம் 2

    *நேரம்

    *6 மெழுகுவர்த்திகள்

    *கும்கி

    *சென்னையில் ஒரு நாள்

    *எதிர் நீச்சல்

    *கோ

    *மரியான்

    *காஞ்சிவரம்

    *மௌனராகம்

    *மெரினா

    *நான்

44 மதிப்பெண்கள் :-

    *தடையற தாக்க

    *தங்க மீன்கள்

    *துப்பாக்கி

    *வானம்

    *சுந்தரபாண்டியன்

    *சாட்டை

    *வாகை சூட வா

45 மதிப்பெண்கள் :-

    *மதுபானக்கடை

    *ஹரிதாஸ்

    *சூது கவ்வும்

    *அட்டைக்கத்தி

    *நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

    *நந்தலாலா

46 மதிப்பெண்கள் :-

    *விஸ்வரூபம்

    *அரவான்

    *புதுப்பேட்டை

    *மொழி

    *ஆரண்ய காண்டம்

47 மதிப்பெண்கள் :-

    *அங்காடித்தெரு

50 மதிப்பெண்கள் :-

    *மூடர்கூடம்

    *;தெய்வத்திருமகள்

    *வேதம் புதிது

    *ஜென்டில்மேன்

51 மதிப்பெண்கள் :-

    *ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

53 மதிப்பெண்கள் :-

    *சொல்ல மறந்த கதை

54 மதிப்பெண்கள் :-

    *திரிசூலம்

56 மதிப்பெண்கள் :-

    *பரதேசி

59 மதிப்பெண்கள் :-

    *புதிய வார்ப்புகள்
   

Friday 20 September 2013

VARUTHAPPADAATHA VAALIBAR SANGAM - NO SADNESS YOUNGSTER ORGANISATION

 


  படத்திற்குள் போகும்முன் ஒரு சின்ன rewind .. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது ..

    "இந்த படம் தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகும்னு எல்லாம் சொல்லல.. எப்பிடியாவது நாங்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு போயிடணும்னு ஒரு படம் எடுத்திருக்கோம் .. அவ்வளவு தான் ..."

    எனக்கு என்னமோ சரிதான்னு படுது
    இதுக்கப்புறம் சிவகார்த்திகேயன் , சூரியோட மார்கெட் உயரும் , ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய வாய்ப்புகள் வரும் , பொன்ராமை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் பணம் போடுவார்கள் .. எல்லாம் நடந்தால் நல்லது தான் .. வாழ்த்துக்கள் ..
    கௌரவமே பெரிசு என்று வாழும் சிவனாண்டி (சத்யராஜ்). எதற்குமே வருத்தபடாத வாலிபர் போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்) சிவனாண்டியின் மகள் லதாபாண்டி (ஸ்ரீதிவ்யா)வை காதலித்தால் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை ..
     படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது ராஜேஷின் வசனம் . வசனம் என்பதை விட காமெடி என்றே சொல்லலாம் .. அதுதான் சரியாக இருக்கும் . ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை பற்றி பெரிதாக சிந்திக்க விடாமல் நம்மை கடத்தி செல்வதில் இந்த காமெடிகள் பெரும் பங்கு விகிக்கின்றன . ஏனென்றால் படத்திர்க்கென்று பெரிதாக கதை ஒன்றும் இல்லை , ஆனால் அதற்க்கான தடம் தெரியாமல் காமெடி மூலம் நம்மை நகர்த்தி செல்கின்றனர் . உண்மையில் இந்த படத்தில் டாஸ்மாக் காட்சிகளும் சந்தானமும் இருந்திருந்தால் பக்கா ராஜேஷ் எம்மின் படம் போலவே இருந்திருக்கும் ( என்ன ஒளிப்பதிவும் இசையும் இன்னும் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கும் ).
     இரண்டாவதாக படத்தில் எனக்கு பிடித்த விஷயம் பொன்ராமின் திரைக்கதை . இவ்வளவு மொண்ணையான கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதையை நீட்டி சென்றிருப்பது பாராட்டப்பட வேண்டியது தான் . கதைப்படி சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவை காதலித்து சத்யராஜின் போலி கவுரவ வேஷத்தை உடைக்க வேண்டும் . அவ்வளவே... இப்படிப்பட்ட கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தால் படம் ஆரம்பித்தது கொஞ்ச நேரத்திலேயே திசை மாறிய கப்பலாக படம் அலுக்கத்தொடங்கி விடும் .
     ஆனால் இங்கே இந்த கதையை தாண்டியும் ஏராளமான காமெடி கோட்டிங் பூசப்பட்ட காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . பிந்து மாதவியினுடனான ஒரு தலை ராகம் , சூரியின் காதல் , "நான் கடவுள்" ராஜேந்திரனின்  பகை , சத்யராஜின் துப்பாக்கி , கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்றுவது , ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்ற காட்சிகளால் நாம் அறியாமலேயே கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது (" வருத்தப்படாத வாலிபர் சங்கம் "  கூட இந்த லிஸ்டில் சேரும் சம்பவம் தான் ) . இப்படி நாம் அறியாமலேயே ஒரு கதை திரையில் நகர்ந்து கொண்டு இருப்பதாலோ என்னமோ படம் போரடிக்கவில்லை ( பொதுவாக ராஜேஷ் எம்மின் எல்லா படங்களும் இதே பாணியில் தான் நகரும் . அதிலும் பாஸ்[எ] பாஸ்கரன்  படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் )
       அடுத்ததாக படத்தில் பிடித்தது இமானின் இசையில் பாடல்கள் . படமாக்கப்பட்ட விதத்தில் பெரிசாக ஒன்றும் இல்லை என்றாலும் கேட்க நன்றாக இருக்கின்றது . " ஊதா கலரு ", " பாக்காதே " போன்ற பாடல்கள் ரொம்ப பிடித்தது .
       படத்தின் ஆகப்பெரிய குறை இவ்வளவு மொண்ணையான கதைக்கரு . படத்தின் எல்லா குறைகளும் இதற்குள்ளேயே அடங்கி விடும் . கதைக்கரு மொன்னையானதாலேயே "சத்யராஜ் - சிவகார்த்திகேயன் " என்ற அருமையான கூட்டணி வீணடிக்கப்பட்டிருக்கிறது . சிவா , சத்யராஜ் , சூரி , ராஜேந்திரன் என யாருக்குமே அவர்கள் திறமைக்கான பாதி தீனி கூட கொடுக்கப்பட வில்லை . அதனாலேயே பின்னணி இசை , ஒளிப்பதிவு போன்ற விஷயங்களுக்கும் பெரிதாக சோபிப்பதர்க்கான வாய்ப்பு இல்லை .
      இருந்தாலும் நல்ல படம் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . குடும்பத்துடன் பார்ப்பது நலம் . குழந்தைகளும் , வயசானவர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள் 

Wednesday 28 August 2013

MADRAS CAFE . . . ACTUALLY JAFFNA CAFE

       






         மெட்ராஸ் கபே ... நேர்மையான ஒரு ராணுவ அதிகாரியின் துப்பறியும் கதை . ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு ஹிந்தி படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் . செம த்ரில்லர் படம் .
         படத்தை பற்றி ஏராளமான controversyக்கள் இருப்பதால் அதை பற்றின கருத்துக்களை கடைசியில் சொல்கிறேன் .
          ஆரம்பம் முதல் படம் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது . இந்திய RAW அதிகாரி ஜான் ஆப்ரஹாம் . இலங்கையில் இந்திய படைகளின் தோல்விக்கு சில தேச துரோகிகள் காரணமாக இருக்கிறார்கள் . அதை கண்டு பிடிக்கவும் , சில சர்வதேச காரணங்களுக்காகவும் ஜான் ஆப்ரஹாம் இந்தியாவில் இருந்து இலங்கை அனுப்ப படுகிறார் . அங்கு அவர் நடத்தும் விசாரணைகள் அவரை எங்கெல்லாமோ கொண்டு செல்கிறது . அதனால் அவர் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் போன்றவையே படம் . 
         படத்தின் மிக பெரிய வெற்றியே கதை சொல்லப்பட்ட விதம் தான். படத்தின் கதை நம் முன்னாள் பிரதமரின் கொலை பற்றியது . ஏற்க்கனவே பல மொழிகளில் பலவாறு பிரித்து மேயப்பட்ட கதை . இருந்தும் படம் செம்ம விறுவிறுப்புடன் செல்ல காரணம் படம் சொல்லப்பட்ட point  of  view  . கதை முழுக்க முழுக்க ஒரு RAW அதிகாரியின் பின்னாலேயே செல்கிறது . நம் எல்லோருக்கும் இலங்கையில் நடந்து போர் பற்றி தெரியும் . அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  கொல்லப்பட்டதும் தெரியும் . அது எப்படி  நடந்தது என்றும் பார்த்துள்ளோம் . இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கொலையாளிகள் வாயிலாக பார்த்தல் தானே  எந்த சஸ்பென்சும் இல்லாமல்  சப்பையாக இருக்கும் . ஆனால் ஒரு கொலை நடக்கப்போகிறது என்றே தெரியாமல் வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக வந்த ஒருவர் படிப்படியாக அந்த கொலையை பற்றி தெரிந்து கொள்ளும் போது நமக்கும் அந்த திரில் ஒட்டிக்கொள்ளும் தானே . அது தான் திரைக்கதையின் வெற்றி . கொலைக்கான காரணங்களை வெறுமனே உணர்வு ரீதியாக ப்ரெசண்ட் செய்யாமல் நிஜமாகவே இதன் பின்னால் ஒளிந்து இருக்கும் சர்வதேச அரசியலை தைரியமாகவும் , தெளிவாகவும் , விறுவிறுப்புடனும் திரையில் கொண்டுவந்த இயக்குனர் சூஜித் சிர்க்காருக்கு hats  off . படம் ஆரம்பம் முதலே ராஜீவ் கொலைக்கு எத்தனை நாள் முன்பு நடக்கிறது என்பதை வைத்து தான் விளக்கப்படுகிறது . இருந்தாலும் பாதி படத்திற்கு பிறகுதான் நாம் கொலைக்கான காரணங்களுக்கே வருகிறோம் . அதாவது நாம் எதை மனதில் வைத்து கதையுடன் பயணிக்கிறோமோ , அதையே மறக்கடிக்கசெய்து , நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த  விஷயத்திற்கு திருப்பி கொண்டு வருகிறார்கள் . எனவே நமக்கு பழக்கப்பட்ட கதையை பார்க்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் புதிய திரில்லர் பார்ப்பது போல் உள்ளது . அதே போல் எதிரிகளின் இன்டர்செப்டுகளை, டீகோட் செய்யும் இடங்களும் செம இன்டலிஜென்ஸ் ...  சோம்நாத் டே , சுபெண்டு பட்டாச்சார்யா வின் திரைக்கதை அவ்வளவு பவர்புல் . 
          ஜான் ஆபிரகாம் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு . எந்த நேரத்திலும் அசராமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய துடிக்கும் அதிகாரியாக வருகிறார் . அந்த இடம் , இந்த இடம் என்றில்லாமல் எல்லா படம் முழுக்கவே இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார் . ஆனால் படத்திலேயே சிறந்த நடிப்பு பாலா கதாபத்திரதினுடையது தான் . பிரகாஷின் அருமையான நடிப்பு. முக்கியமாக தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் செம்ம கெத்து . ஜானின் மேலதிகாரியும் ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு அழும் அந்த காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார் . 
         படத்தில் இடம் சார்ந்த detailing அவ்வளவு நேர்த்தியாக உள்ளது . LTF (Lankan  Tamil  Front )ன் பேஸ் கேம்ப் செல்லும் வழி எல்லாம் நிஜமாகவே காட்டிற்கு செல்லும் feelling கொடுக்கிறது . யாழ்பாணம் , சென்னை , மதுரை , லண்டன் , சிங்கப்பூர்  என பறந்து பறந்து செல்லும்  கதையில்  எங்குமே சிறிதும் குழப்பம் இல்லாமல் நம்மால் கதையுடன் பயணிக்க முடிகிறது .
         மிகவும் கவனிக்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒளிப்பதிவு . ஒளிப்பத்வாளர் கமல்ஜீத் நேகி படத்தின் இந்த டோனை கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளார் . அதிலும் ஆரம்பத்தில் வரும்  அந்த போர் காட்சிகள் மிகவும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது . படத்தில் பாடல்கள் திணிக்கபடாதது பெரும் சந்தோஷம் , எப்படி பட்ட பாடலாக இருந்தாலும் இந்த படத்தில் அது ஸ்பீட் ப்றேக்கராகவே இருந்திருக்கும் . ஆனால் பின்னணி இசை சில இடங்களில் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கலாம் . 
        படத்தில் நான் காணும் சில குறைகளும் உள்ளன  . மொழி சார்ந்த detailing  படத்தில் மிகவும் மோசம் . நன்றாக ஹிந்தி பேசும் ஈழத்தமிழர்கள் யாருமே ஈழத்தமிழ் பேசவில்லை . கொலையாளிகள் தங்கி இருக்கும் அந்த வீட்டில் அவர்கள் பேசும் சில டயலாக் ஈழத்தமிழ் தானா , இல்லை மலையாளமா என்று சந்தேகமாக உள்ளது . அதே போல் கதை நடப்பது 1990களின் தொடக்கம் . ஜான் ஒரு பெட்டிக்கடையில் நின்று பேசும்போது அங்கு ஒரு குமுதம் சிநேகிதி இதழ் தொங்க விடப்பட்டுள்ளது . அதன் அட்டையில் நடிகை சிநேகா படம் உள்ளது . சிநேகா 2001ம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் வந்த "விரும்புகிறேன் " படத்தில் அல்லாவா அறிமுகம் ஆனார் . .... இது போன்ற சின்ன சின்ன தவறுகள் வராமல் பார்த்திருக்கலாம் . என்ன இருந்தாலும் செம்மையான த்ரில்லர் படம் . டிக்கட் காசு வீணாக போகாது .. 


        படம் பற்றின controversyக்கள் . . .


        படத்தில் யாரை பற்றியும் திணிக்கப்பட்ட  சித்தரிப்புகள் இல்லை என்றே எனக்கு தோன்றியது .
        கிளைமாக்சில் ஜான் ரபீந்தரநாத் தாகூரில் கீழ்கண்ட வரிகளை சொல்கிறார் .

             " Where the mind is without fear and the head is held high 
               Where knowledge is free 
               Where the world has not been broken up into fragments 
               By narrow domestic walls 
               Where words come out from the depth of truth 
               Where tireless striving stretches its arms towards perfection 
               Where the clear stream of reason has not lost its way 
               Into the dreary desert sand of dead habit 
               Where the mind is led forward by thee 
               Into ever-widening thought and action 
               Into that heaven of freedom, my Father, let my country awake  "


           மொழி பற்றின குறுகிய உணர்வில்லாமல் " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்று வாழ்பவர்களுக்கு இந்த படத்தை எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதே என் கருத்து 

Wednesday 14 August 2013

CHENNAI EXPRESS - DON'T UNDERESTIMATE OKEYYY..

       


            சென்னை எக்ஸ்பிரஸ் கதை சுருக்கத்தை புதிதாக சொல்ல தேவையில்லை .. படம் வெளிவரும் முன்னே எல்லோரும் அறிந்ததே .
           இருந்தாலும் சுருக்கமா சொல்லிடுறேன் .. தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைப்பதாக பாட்டியிடம் பொய் சொல்லி விட்டு கோவா செல்லும் ஷாருக் தீபிகாவால் ஏற்படும் குழப்பத்தால் தமிழகத்திற்கு வர வேண்டி வருகிறது .. அங்கே ..  (சாரி) இங்கே நடக்கும் பிரச்சனைகள், அதை ஷாருக் நேரிடுவதே படம் ..
             படத்தை பார்க்கும் முன் நீங்கள் தமிழாரக இருந்தால் , அதை சுத்தமாக மறந்து விடவும் . உங்களை ஒரு ஹிந்திகாரராக நினைத்துகொண்டு படம் பார்த்தால் மட்டுமே படத்துடன் ஒன்ற முடியும் .
               படத்தின் எல்லா தளங்களிலும் ப்ளஸ் , மைனஸ் பாயிண்ட்டுகள் இருப்பதால் படத்தின் ப்ளஸ் எது மைனஸ் எது என்றே பார்த்து விடலாம் .
             
                படத்தின் முதல் ப்ளஸ் ஷாருக் .. இது முழுக்க முழுக்க ஷாருக் ரசிகர்களுக்கான படம். நீங்கள் ஷாருக் ரசிகராக இருந்தால் என்னதான் சினிமாத்தனம் அதிகம் என்று சொன்னாலும் படத்தை ரசிப்பீர்கள் . ஷாருக் பற்றி சொல்லும்போது திரைக்கதையில் ஷாருக்கின் கதாபாத்திரமும் சரி அதை ஷாருக் ப்ரெசண்ட் செய்திருக்கும் விதமும் சரி மிகவும்  நேர்த்தியாக இருக்கிறது , எப்படிஎன்றால் படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் வடிவமைப்பிற்கு உழைத்ததை விட பத்து மடங்கு அதிகமாக ஷாருக் பாத்திரத்திற்கு உழைத்துள்ளனர் .. ஆரம்பம் முதலே தீபிகா மீதோ, தாத்தா மீதோ எந்த பிணைப்பும் இல்லாமல் சுத்திக்கொண்டு இருக்கிறார் , ஆனால் காதல் மலர்ந்த பிறகு எதிரிகளை பின்னி பெடலெடுக்கிறார் .( நிஜமாலுமே காதலால் இதுபோன்ற ஜிகினாதனங்களை செய்ய முடியும் தானே .. ) ஆரம்பம் முதலே அவர் சொல்லி வரும் "dont underestimate the  power of a common men " என்ற டயலாக் பல நேரங்களில் அவருடைய செயல்பாடுகளை justify செய்ய உதவுகிறது . அடுத்ததாக ஷாருக்கின் screen presence .. அவருக்கென்றே வார்த்தெடுத்த அச்சு என்பதால் அருமையாக fit ஆகி போகிறார் .. எதிரிகளை கண்டு பயந்து நடுங்கும்போது அவர் கொடுக்கும் வாய்ஸ் மோடுலேஷன் .. " a typical SRK stroke " . என்னதான் லாஜிக் இடித்தாலும் அவருடைய பழைய பாடல் வரிகளை பாடியே தீபிகாவுடன் ரகசியமாக பேசுவது செம்ம செம்ம . இதில் கவனிக்க வேண்டிய வேறொரு விஷயம் இது போன்றதொரு கதாபாத்திரத்தை வேறு எந்த நடிகர் செய்தாலும் நம்மால் இந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியாது என்பதே .. எதிரிகளுக்கு பயந்து நடுங்கும் நடிகராக சல்மானோ , ரஜினியோ , விஜயோ எல்லாம் நடிக்க மாட்டார்கள் ( நடிக்க முடியாது )... அப்படி நடித்தால் ( ரன்பீர் , நம்ம ஆர்யா ) இறுதியில் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் படத்துடன் ஒட்டாது .. ஆனால் இது ரெண்டையும் சேர்த்து (ஒரே படத்தில் ) செய்ய முடிந்த ஒரே நடிகர் இந்தியாவிலேயே ஷாருக் மட்டுமே . அதுதான் நம்ம king khan .
                 தீபிகாவின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது . சும்மா ஆடிக்கும் அம்மாவாசைக்கும் வராமல் கதையுடன் பயணிகிறார் . சுதந்திரத்தை விரும்பும் ஜாலியான பெண் கிராமத்தில் ஒரு பெரிய தலைக்கு பிறந்ததால் முடங்கி கிடக்க வேண்டி வருகிறது . அதை எதிர்த்து அவர் போராடி ஓடிபோகும் போதும் கூட  ஜாலியாக ஷாருக்கை கலாய்த்துக்கொண்டே இருக்கிறார் . அவருடைய அந்த பாசிடிவ் attitude படத்தை என்டேர்டேயினிங் ஆக வைக்க பெரிதும் உதவுகிறது .
                  படத்தின் அடுத்த ப்ளஸ் எங்கும் நிக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் திரைக்கதை . லாஜிக் சறுக்கல்களை ரசிகர்களின் அளவிற்கு கூட சட்டை செய்யாமல் அடுத்து அடுத்து என்று பாய்ந்து சென்று கொண்டே இருக்கிறது .
               

                 படத்தின் மைனஸ் பாயிண்டுகள் நிறைய. வேகமான திரைக்கதையுடன் ஒன்ற வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் தென்னகத்தின் புவியியலை  பற்றி கொஞ்சமும் தெரியாதவராக இருக்க வேண்டும் . ஒரு இடத்தில் கூட படத்தின் கதைக்களம் ஒரு தமிழக கிராமம் என்று நம்ப முடியவில்லை .
                 படத்துடன் ஒன்ற வேண்டுமெனில் உங்களுக்கு தமிழும் தெரிந்திருக்க கூடாது . தீபிகாவும் அவரது சொந்தங்களும் பேசும் தமிழ் நிஜமாகவே கடுப்பை வரவழைக்கிறது . பெரிய தல உட்பட எல்லா கதாபத்திரங்களையும் ஹிந்தி நடிகர்கள் செய்திருந்தால் கூட எல்லாருடைய தமிழும் synchronize ஆகி இருக்கும் , ஆனால் இங்கே ஒரு பக்கம் சத்யராஜ் " என்னம்மா கண்ணு ", "அட எழவு " என்று பிச்சு எடுக்க மத்த நடிகர்கள் தமிழையே பிச்சு எடுக்கிறார்கள் . தென்னிந்தியரான ரோஹித் ஷெட்டியே இதில் கோட்டை விட்டிருப்பதுதான்
வருத்தம் .
                 சத்யராஜின் கதாபாத்திரம் இன்னும் strong ஆக அமைக்க்கபட்டிருக்க வேண்டும் .. அப்படி இல்லாததால் கடைசி வரை வில்லன் மீது பயமும் வரவில்லை இறுதியில் அவர் எடுக்கும் முடிவால் சந்தோஷமும் வரவில்லை.
                   படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தின் technical  side .. அதை சொல்ல தேவை இல்லை . படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் . (முக்கியமாக ஆர்ட் டைரக்ஷன் )
                    பாடல்கள் ஓன்று கூட மனதில் நிற்காதது அடுத்த மைனஸ் . பின்னணி இசை கூட பரவாயில்லை ரகம் தான் .
                    லுங்கி டான்ஸ் நிச்சயமாக தமிழர்களை கவர வைக்கப்பட்டுள்ளது தான் . ஆனால் படம் முழுவதையும் ஹிந்தி ரசிகர்களுக்காக எடுத்து விட்டு கடைசியில் ஒரு லுங்கி டான்சை திணித்தது சற்றும் போணி ஆகவில்லை .. நிஜமாகவே தமிழர்களை கவர கொஞ்சமாவது தமிழகத்தை பற்றி கொஞ்சமாவது ground  work  செய்திருக்கலாம் .
                    ஒரு நல்ல என்டர்டைனர் படம் தான் . கொஞ்சம் திரைக்கதையிலும் நிறைய technical side லும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் பட்டய கிளப்பி இருக்கும் . ஷாருக் , மற்றும் கமர்ஷியல் பட ரசிகர்கள் நம்பி படம் பார்க்க போகலாம். 

Sunday 28 July 2013

GILLI - KAPADI KAPADI KAPADI

      
        ரொம்ப நாளைக்கு பிறகு சூர்யா டீவியில் கில்லி படம் பார்த்தேன். நான் தியேட்டரில் பார்த்து மிகவும் ரசித்த படம் என்றால் அது கில்லி தான் . ஸோ கில்லி பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தோன்றியது . 
       2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , என் அக்கா 10த் முடித்து விட்டு  +1ற்கு  தாராபுரம் st.aloysius பள்ளியில் சேர்ந்து இருந்தார். அக்காவின் முதல் ஹாஸ்டல் அனுபவம் . அக்காவை பள்ளியில் விட்டுவிட்டு வெளியில் உட்கார்ந்திருந்த பொது நானும் அம்மாவும் ஒரே அழுகை . அம்மா அக்காவிற்காகவும் நான் கில்லி படம் பார்பதற்காகவும். கொஞ்சம் நேரத்தில் அப்பா படம் பார்க்க கூட்டி சென்றார் . அது ஒரு டப்பா  தியேட்டர் , சரியாக பராமரிக்க படாமலும் இருந்தது . அம்மாவிற்கு தியேட்டருக்கு வரவும் பிடிக்கவில்லை , அந்த தியேட்டரும் பிடிக்கவில்லை. 
       அந்த வயதில் கில்லி எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது . ஆனால் இன்று யோசித்தது பார்க்கும் போது படத்ததை பற்றின வேறு ஒரு பார்வை கிடைத்தது . நாம் மிகவும் ரசித்த ஒரு படத்தை பல நாட்களுக்கு பின் பார்த்தால்  கொஞ்சம் மொக்கையாக தோன்றும் , ஆனால் கில்லி விஷயத்தில் அப்படி இல்லை , அன்று எந்த ஆர்வத்துடன் பார்த்தேனோ இன்றும் அதே உற்சாகத்துடன் ரசித்தேன் . காரணம் அன்று புரியவில்லை , இன்று புரிகிறது .



 
       படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட் பாத்திர படைப்புகள்  . 
       சரவணா வேலு , படிப்பில் ஆர்வம் இல்லாமல் கபடி விளையாடி திரியும் பய்யன் . அநியாயம் நடப்பதை கண்டால் கோபப் படுவான் , இருந்தாலும் எல்லாவற்றையும் புத்திசாலித்தனத்துடனும் ஜாலியாகவும் எதிர்கொள்ளுவான் . இந்த குணாதிசயங்கள் கடைசி வரை விஜயின் கதாபாத்திரத்தில்  பிரதிபலிக்கும் . உள்ளூர் கபடி டீம் முதல் பிரகாஷ் ராஜ் வரை தன்னை சீண்டுபவர்களிடம் எல்லாம் கோபப்படுவார், ஆனால் அப்பாவை பார்த்தால் பம்முவார் . தனலட்சுமி மீது தான் எடுத்துக்கொண்ட  responsibility காரணமாக அவருக்கு வேண்டியது எல்லாம் செய்வார் ஆனால் கோபப்பட வேண்டியபோது கோபப்படுவார் . 
       தனலட்சுமி கதாபாத்திரமும் அப்படியே ... சந்தோஷமாக வாழும் பெண் . தன்  குடும்பத்துடன் இருந்த பொது ஜாலியாக இருப்பார். பிரகாஷ் ராஜால் பிரச்சனை வந்த பிறகு அவருக்குள் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும் . விஜய் வீட்டின் சூழ்நிலை பிடித்தவுடன் பழைய துறுதுறுப்பு வந்து விடும் . 
       முத்துப்பாண்டி கதாபாத்திரம் படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஓன்று 
படத்தின் மற்ற கதாபாத்திரங்களை விட முத்துப்பாண்டி கதாபாத்திரம் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும் . பிரகாஷ் ராஜை பார்த்து நாம் படம் நெடுக சிரித்துக்கொண்டு இருப்போம் , ஆனால் பிரகாஷ் ராஜ் செய்யும் வில்லத்தனம் சீரியஸாகத்தான் இருக்கும் . முக்கியமான தருணங்களில் தனலட்சுமி முத்துப்பாண்டியிடம் மாட்டி விட கூடாது என்ற பரபரப்பு நமக்குள் இருக்கும் . ஆனால் முத்துப்பாண்டி திரையில் தோன்றி விட்டால் நாம் குதூகலமாகி விடுவோம் . பிரகாஷ் ராஜின் நடிப்பும் இதற்கு ஒரு காரணம் , அவர் தவிர வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு effect வந்திருக்காது.
       மற்ற கதாபாத்திரங்கள் கூட நூல் பிடித்தாற்போல் அமைக்க பட்டிருக்கும் .
விஜய் தன அம்மாவை பற்றி 

       "அப்பாவுக்கு தெரியாம நிறைய துட்டு கொடுப்பாங்க , ஆனால் என்ன விட்டு மட்டும் கொடுக்க மாட்டாங்க"

        என்று சொல்லுவார், அதே போல் விஜய் வீட்டிற்கு ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வரும்போது கூட அம்மா கோபபட மாட்டார். விஜய்யின் அப்பா கதாபாத்திரமும் அந்த விறைப்பான சுபாவத்தை கடைசி வரையில் விடாது . விஜய் 5ம் வகுப்பில் fail ஆவது முதல் டிகிரி அரியரை சொல்லி திட்டுவது வரை அந்த விறைப்பு அப்படியே இருக்கும் . அவர் துடிப்பான நேர்மையான அதிகாரி என்றும் படத்தில் காட்டபட்டிருக்கும் , அதற்க்கு ஏற்றவாறு தான் தேடும் குற்றவாளி தன மகன் தான் என்று தெரிந்த பிறகு கூட அவர் முகத்தில் எந்த சலனமும் இருக்காது , குற்றவாளியை பிடிக்க வேண்டுமே என்ற முனைப்பு மட்டுமே இருக்கும் . விஜயின் தங்கை கதாபாத்திரத்தை நமக்கு எல்லோருக்கும் பிடித்திருக்கும். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துனராக வந்த போது கூட அனைவரும் கில்லியின் பெயரை சொல்லியே அவரை அடையாளம் கண்டு கொண்டோம் . ஆரம்பம் முதல் அண்ணனோடு சண்டை போட்டு விட்டு , கடைசியில் அப்பாவிடம் அண்ணனுக்காக உருகி உருகி பேசுவார் . அவர் என்ன தான் சண்டை போட்டாலும் பிரச்சனை வரும்போது அண்ணனை விட்டு கொடுக்க மாட்டார் என்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் . எப்படியென்றால் , ஒரு காட்சியில் தன வீட்டில் ஒரு பெண் அண்ணனால் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்த போதும் அண்ணனை மாட்டி விட மாட்டார் . அதே போல அண்ணனின் காதலை கண்டு சந்தோஷ படுவார், பெரும்பாலான தங்கச்சிகள் அப்படித்தானே . மயில்சாமி - எப்போதும் தண்ணி அடித்துக்கொண்டு இருப்பார் , விஜயின் லோக்கல் ரசிகன், கடைசி வரை விஜயை ஹீரோவாகவே பார்ப்பார் . விஜயின் நண்பர்கள் கூட நம் நிஜ நண்பர்களை ஞாபகப்படுத்துவார்கள் , ஒரு உதாரணம் , கிளைமாக்ஸில் நாகேந்திர பிரசாத் விஜயிடம் கோபப்படுவார் . 
       " என்னமோ பெருசா  உடல் பலத்த விட மன பலம் தான் முக்கியம்னு பேசுன , இப்போ என்னடா ஆச்சு "
       " என் மனசே என்கிட்டே இல்லாடா "
         உடனே தோல்வியை மறந்து விட்டு விஜயின் காதலுக்காக கவலை பட தொடங்கி விடுவார் . அதுதானே நண்பர்கள் .....
       படத்தை அத்தனை சுவாரசியமாக்கியது திரைக்கதை தான் என்று எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலான கமர்சியல் படங்களில் " commercial aspects/ commercial elements" என்ற பெயரில் படத்திற்கு சம்பந்தம் இல்லாத காட்சிகளை   காட்டு காட்டு என்று  காட்டி  விடுவார்கள்  . எந்த தேவையும் இல்லாமல் பாட்டு வரும் . ஒரு காமெடியன் வந்து காமெடி மாதிரி ஏதேதோ செய்வார் . கரணம் தப்பினால் மரணம் என்று வைக்கப்படும் இப்படிப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் படத்திற்கு speed breakerகளாக அமைந்து விடுவதுண்டு . ஷங்கர் , ஹரி போன்ற வெகுசில இயக்குனர்களே இதில் பெரும்பாலான  நேரங்களில் ( எல்லா நேரங்களிலும் இல்லை ) வெற்றி பெறுகிறார்கள் , ஆனால் கில்லி படத்தில் ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரத்தை விளக்கவோ , கதையை நகர்த்தவோ மட்டுமே பயன் படுத்த படுகிறது .
       பாடல்கள் கூட கதையுடன் சேர்ந்தே வருகிறது 
       கபடி போட்டி வெற்றியின் கொண்டாட்டமே " சூரத்தேங்காய் அட்றா அட்றா " பாடல் 
       தனலட்சுமி கதாபாத்திரத்தின் நிலையை விளக்குவதே " ஷல்லல்லா " பாடல் . அந்த பாடலின் இரண்டாம் சரணத்தின் முடிவில் " யாரவனோ ... யாஆஆரவ் வ்வனோஓ ....." என்று பாடும் போது விஜய் நண்பர்களுடன் ஆற்றில் குதிக்கும் காட்சி காட்டபடுகிறது  . 
       "அர்ஜுனரு வில்லு பாடல் " ஒரு கதாநாயக வழிபாட்டு பாடல் .  ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்து தனலட்சுமியை மீட்டு கொண்டு வந்தவரை பற்றி தாராளமாக " கதாநாயக வழிபாட்டு" பாடல் பாடலாம் . பட தொடக்கத்திலேயே கதாபாத்திரத்தை சற்றும் மனதில் கொள்ளாமல் அந்த நடிகரை மட்டுமே மனதில் வைத்து பாடப்படும் பாடலை விட நிஜமாகவே ஹீரோயிசம் காட்டி விட்டு பாடுவது உறுத்தவில்லை . 
       தனலட்சுமியின் பிறந்த நாள் கொண்டாட்ட பாடல் " கொக்கர கொக்கர கோ"
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . கதை சொல்லவும் இந்த பாடல் பயன் படுத்த பட்டிருக்கும் . அண்ணனும் தனலட்சுமியும் தலையை இடித்துக்கொண்டு சிரிக்கும் போது புவனா (தங்கை) "கண்ணனுக்கு வள்ளிய போல" என்று பாடத்தொடங்குவார் . புவனாவிற்கு தனலட்சுமியை பிடித்து விட்டது என்று இந்த வரிகள் சொல்லுகிறது . தனலட்சுமி பிரிந்து போகும் பொது தானும் சேர்ந்து அழுது, அண்ணனை திட்டுவது போல கடைசியில் ஒரு காட்சி வரும் . அந்த காட்சியை உறுதி படுத்த இந்த பாடல் வரிகள் உதவி புரிகிறது . எந்தவொரு பெண்ணும் ஆணிடம் இருந்து  ஒருsecured feelஐ எதிர்பார்ப்பாள் . முத்துபாண்டி மூலம் பறிபோகும் அந்த secured feel விஜய் மூலமாக திரும்ப கிடைக்கிறது . அப்போது மீண்டும் அவளுக்குள் ஒளிந்து இருக்கும் சந்தோஷமும் துறு துறுப்பும் வெளியே வருகிறது , அது கூட இந்த பாடலில் த்ரிஷா பாடும் வரிகளில் வெளிப்படுகிறது .
       கடைசியில் த்ரிஷாவிற்கு விஜய் மீது உறுதியாக காதல் வந்து விட்டது என்னும் இடத்தில் "அப்படி " போடு பாடல் . கதையுடன் சேர்ந்தே வந்தாலும் கதையை தாண்டியும் ரசிக்க வைத்த பாடல் . 
       வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட் , எனக்கும் பிடித்து இருந்தது . ஆனால் பாடல்களை விட பின்னணி இசை மிகவும் கவர்ந்தது 
        மாநகரங்களுக்கு என்று ஒரு பவர் உண்டு ... அதை உணர்ந்திருக்கிறீர்களா ??? தமிழர்கள் என்பதால் சென்னையை எடுத்துக்கொள்வோம் . சென்னைக்கென்று ஒரு பவர் , ஒரு ஈர்ப்பு உண்டு அதை உணர்ந்திருக்கிறீர்களா???   
        "கிராமம் மாதிரி வருமா...? தாமிரபரணி தண்ணி மாதிரி வருமா...? மதுர மல்லி வாசம் மாதிரி வருமா ... ? என்றெல்லாம் பீத்திக்கொண்டாலும் எதுவுமே சென்னைக்கு ஈடாகாது . வெறும் பணம் சம்பாதிக்கும் இடம் மட்டுமாக இருந்தால் ஒரு கோடி மக்கள் இந்த சின்ன வட்டத்திற்குள் வாழ மாட்டார்கள் , அதையும் தாண்டி சென்னைக்கு ஒரு புத்துணர்வு உண்டு, சென்னையை நினைத்தாலே அந்த புத்துணர்வு நமக்குள் ஒட்டிக்கொள்ளும் .
          இதை ஏன் சொல்கிறேன் என்றால் "அப்படி போடு பாடலுக்கு முன் விஜய் த்ரிஷாவிடம் சொல்வார் . 
  இடம் : லைட் ஹவுஸ் உச்சி 
  நேரம் : இரவு 
           " இங்க இருந்து பார்த்தால் ஊரே நமக்கு தெரியும் , ஆனா நாம இங்க இருக்குறது யாருக்கும் தெரியாது . பவுர்ணமி அன்னிக்கு இங்க இருந்து பாத்தா கடல் எப்படி இருக்கும் தெரியுமா...??"
           என்று சொல்லிக்கொண்டே " ஊ ஊ ... " என்று கத்துவார் . நைட் effectல் சென்னையை காண்பிப்பார்கள் . அப்போது வித்யாசாகர் ஒரு ம்யூசிக் போடுவார் பாருங்க ... சூப்பர் ... ( சென்னை பற்றின அந்த புத்துணர்வு எனக்குள் வந்து செல்லும்   ) அடுத்தடுத்த காட்சிகளில் அதே லைட் ஹவுசில் இருந்து கொண்டு த்ரிஷா விஜயை பார்த்து "நான் இங்க இருந்து போறதில் உனக்கு கொஞ்சம் கூட feeling இல்லையா??? " என்று கேட்பார். பின்னணியில் அதே இசை . அப்போது நமக்கே த்ரிஷா அந்த ஊரை விட்டு செல்வது பற்றி feel ஆகி விடும் ... இது போல வித்யாசாகரின் பின்னணி இசை பல இடங்களில் நம்மை உணர்வு ரீதியாக வேறு தளத்திற்கு கொடு சென்று விடும் . 
           படத்தின் ஆர்ட் டைரக்ஷன் எனக்கு மிகவும் பிடிக்கும் "டி . மணிராஜ் " என்று நினைக்கிறேன். விஜய் வீட்டில் த்ரிஷாவை ஒளித்து வைத்திருக்கும்போது "இது சாத்தியமா " என்ற கேள்வி எழாமல் இருப்பதற்கு ஆர்ட் டைரக்ஷனும் ஒரு காரணம் . 
           வெறும் ஆக்ஷன் படம் என்றில்லாமல் உணர்வு ரீதியாக அணுகியதே கில்லியை இப்போது ரசிக்க வைக்கிறது 
            படம் முடிந்து வீட்டிற்கு செல்ல 5 மணி நேரம் பேருந்து பயணம் . அம்மா ஒரு முறைக்கூட அக்காவை நினைத்து அழவில்லை .... அது தான் கில்லி 

Wednesday 10 July 2013

LET SINGAM DANCE....


சிங்கம் 2 - துரை சிங்கத்தின் கடல் வேட்டை . . .
          மயில் வாகனம் மிஷனுக்கு பிறகு தூத்துக்குடியில் கடல் வில்லன்களை அழிக்கும் சிங்கத்தின் கதை. படத்தின் கதை சிங்கம் க்ளைமக்சிலேயே சொல்லி விட்டார்கள். தூத்துக்குடி கடற்கரை வழியாக நடக்கும் சட்ட விரோத செயல்களை பள்ளி ஆசிரியர் ஆக இருந்து கண்காணிக்கிறார் துரை சிங்கம் . சரியான நேரத்தில் போலிஸ் வேலைக்கு திரும்பி லோக்கல் மற்றும் ஆப்பிரிக்க வில்லன்களை பிடிக்கிறார்.
           படம் முழுவதும் வியாபித்து தெரியும் ஒரே பெயர் ஹரி ஹரி ஹரி. எனவே மற்ற விஷயங்களை பார்த்து விட்டு இயக்குனரிடம் வருவோம் .
           ஹாட் டிரிக் தோல்வியை சந்தித்து விட கூடாது என்பதற்கான சூர்யாவின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது . துரை சிங்கம் கதாபாத்திரத்தில் சிவாஜி , கமல், விக்ரம் போன்ற "எதையும் நடிக்கும் இதயங்களை " கூட இனி நினைத்து பார்க்க முடியாது . அந்த அளவுக்கு சூர்யா பொருந்தி உள்ளார் அல்லது தன்னை பொருத்தி கொண்டு உள்ளார் . நடனத்திலும் பெரிய முன்னேற்றம் .  மாஸ் ஹீரோ கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கும் எவ்வளவு உழைப்பை கொட்ட வேண்டும் என்பதற்கு சூர்யா ஒரு உதாரணம் .
           அனுஷ்காவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லாவிட்டாலும் அழகாக இருக்கிறார். அம்சமாக நடிக்கிறார், அருமையாக ஆடுகிறார். அனுஷ்கா இருக்கும்போதே கதையை நகர்த்துவதிலும் ரசிகர்களை ஈர்ப்பதும் ஹன்சிகா தான்.
            ஒன்றிற்கு மூன்று வில்லன்கள் இருந்தும் யாருமே மயில் வாகனம் அளவிற்கு மனதில் பதியவில்லை
             இனி இயக்குனரை பற்றி . . . . . . .
             சூர்யாவின் ஸ்டார் வேல்யு , சிங்கத்தின் வெற்றி என எதையுமே மனதில் கொள்ளாமல் திரைக்கதையை செதுக்குவதில் பெரும் உழைப்பை கொட்டியிருக்கிறார் ஹரி. அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல...
              சிங்கம் 2வையும் சிங்கத்தையும் இணைத்துள்ள விதம் பாராட்ட தக்கது . சிங்கம் படம் பார்த்த எந்த ரசிகனுக்கும் படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை தன்னை படத்தோடு தொடர்பு படுத்தி கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது . கதாபாத்திரங்களின்  தன்மைக்கு எந்த மாற்றமும் இல்லை. சூர்யா தன மேலதிகாரியிடம் கோபப்படும் இடம் சிங்கத்தில் நிழல்கள் ரவியிடம் கோபப்படும் காட்சியின் நீட்சியே. துரைசிங்கம் கதாபாத்திரத்திற்கு போலீஸ் வேலை மீது உள்ள மரியாதையும் எவருக்கும் அஞ்சாத தன்மையும் இந்த இரு காட்சிகளிலும் ஒரே போல வெளிப்பட்டிருக்கும் .
             ராதா ரவிக்கு இருக்கும் கோபம் , அனுஷ்கா அம்மாவின் லூசுத்தனம், தியாகு நடித்திருக்கும் ஹார்பர் சண்முகம் கேரக்ட்டர் முதலியவை முதல் பாகத்தில் இருந்து கோர்வையாக தொடரப்பட்டிருக்கும் . இது போக புதிதாக ஹன்சிகா, சந்தானம், நான்கு வில்லன்கள் , மன்சூர் அலிகான் என பல நடிகர்கள் இருந்தாலும் எவருமே கதையில் திணிக்கப்படவில்லை . முக்கியமாக ஹன்சிகா ரசிகர்களை கவருவதன காரணம்  அவருடைய பாத்திர படைப்பு தான் . ( கவனிக்க : சந்தானம் கதாபாத்திரம் திணிக்க பட்டிருப்பது போல் தோன்றலாம் . ஆனால் நன்றாக பார்த்தால் , சிங்கம் படம் பார்க்காத ரசிகர்களுக்கு கதையை புரிய வைக்க ஹரி உபயோக படுத்தி இருக்கும் உத்தி இது என புரியும் . அப்படியிருக்கையில் சூர்யா போலீஸ் வேலைக்கு திரும்பிய பின் அந்த  கதாபாத்திரத்திற்கு வேலை இல்லாமல் போய் விடும் . எனவே தான் சூர்யா போலீஸ் வேலைக்கு திரும்பிய பின் விவேக் காமெடியை குறைத்து சந்தானம் காமெடியை அதிகபடுத்தி இருக்கிறார் ஹரி. )
           பிரியன் ஒளிப்பதிவு படத்திற்கு ஆகா பெரிய பலம் . பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் அருமை. வேட்டி சட்டை, மழை இரவு , தெரு விளக்கு வெளிச்சம் என அமைந்து இருக்கும் சண்டைக்காட்சி அபாரம்.
           இரண்டாம் பாதியின் நடுப்பகுதிகளில் திரைக்கதையில் ஏற்பட்டுள்ள தொய்வால் கொட்டாவி வருகிறது . ஆனால் கொஞ்சம் நேரத்திலேயே அதை சரி செய்து பழைய வேகத்தை மீட்டு எடுக்கிறார் ஹரி. நான்கு வில்லன்களில் யாருமே சிங்கம் மயில் வாகனத்திற்கு ஈடாகவில்லை . அதிலும் அந்த பாய் வில்லன் ஊஹூம். . . படத்தின் நீளம் சற்றே அதிகம் என்று தோன்றுகிறது , அதாவது முதல் பாதி கொஞ்ச நேரமும்  இரண்டாம் பாதி அதீதீதீ . . .. . .க நேரமும் எடுப்பது போல் தோன்றுகிறது.
            என்னதான் இருந்தாலும் எனக்கென்னவோ தமிழ் சினிமாவில் வந்த பெஸ்ட் சீக்வல் படம் சிங்கம் 2 தான் என்று தோன்றுகிறது . ரசிகனின் நேரத்தையும் பணத்தையும் மதிக்கும் எண்டர்டெய்னர் படைத்திருக்கும் ஹரி படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் .