சென்னை எக்ஸ்பிரஸ் கதை சுருக்கத்தை புதிதாக சொல்ல தேவையில்லை .. படம் வெளிவரும் முன்னே எல்லோரும் அறிந்ததே .
இருந்தாலும் சுருக்கமா சொல்லிடுறேன் .. தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைப்பதாக பாட்டியிடம் பொய் சொல்லி விட்டு கோவா செல்லும் ஷாருக் தீபிகாவால் ஏற்படும் குழப்பத்தால் தமிழகத்திற்கு வர வேண்டி வருகிறது .. அங்கே .. (சாரி) இங்கே நடக்கும் பிரச்சனைகள், அதை ஷாருக் நேரிடுவதே படம் ..
படத்தை பார்க்கும் முன் நீங்கள் தமிழாரக இருந்தால் , அதை சுத்தமாக மறந்து விடவும் . உங்களை ஒரு ஹிந்திகாரராக நினைத்துகொண்டு படம் பார்த்தால் மட்டுமே படத்துடன் ஒன்ற முடியும் .
படத்தின் எல்லா தளங்களிலும் ப்ளஸ் , மைனஸ் பாயிண்ட்டுகள் இருப்பதால் படத்தின் ப்ளஸ் எது மைனஸ் எது என்றே பார்த்து விடலாம் .
படத்தின் முதல் ப்ளஸ் ஷாருக் .. இது முழுக்க முழுக்க ஷாருக் ரசிகர்களுக்கான படம். நீங்கள் ஷாருக் ரசிகராக இருந்தால் என்னதான் சினிமாத்தனம் அதிகம் என்று சொன்னாலும் படத்தை ரசிப்பீர்கள் . ஷாருக் பற்றி சொல்லும்போது திரைக்கதையில் ஷாருக்கின் கதாபாத்திரமும் சரி அதை ஷாருக் ப்ரெசண்ட் செய்திருக்கும் விதமும் சரி மிகவும் நேர்த்தியாக இருக்கிறது , எப்படிஎன்றால் படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் வடிவமைப்பிற்கு உழைத்ததை விட பத்து மடங்கு அதிகமாக ஷாருக் பாத்திரத்திற்கு உழைத்துள்ளனர் .. ஆரம்பம் முதலே தீபிகா மீதோ, தாத்தா மீதோ எந்த பிணைப்பும் இல்லாமல் சுத்திக்கொண்டு இருக்கிறார் , ஆனால் காதல் மலர்ந்த பிறகு எதிரிகளை பின்னி பெடலெடுக்கிறார் .( நிஜமாலுமே காதலால் இதுபோன்ற ஜிகினாதனங்களை செய்ய முடியும் தானே .. ) ஆரம்பம் முதலே அவர் சொல்லி வரும் "dont underestimate the power of a common men " என்ற டயலாக் பல நேரங்களில் அவருடைய செயல்பாடுகளை justify செய்ய உதவுகிறது . அடுத்ததாக ஷாருக்கின் screen presence .. அவருக்கென்றே வார்த்தெடுத்த அச்சு என்பதால் அருமையாக fit ஆகி போகிறார் .. எதிரிகளை கண்டு பயந்து நடுங்கும்போது அவர் கொடுக்கும் வாய்ஸ் மோடுலேஷன் .. " a typical SRK stroke " . என்னதான் லாஜிக் இடித்தாலும் அவருடைய பழைய பாடல் வரிகளை பாடியே தீபிகாவுடன் ரகசியமாக பேசுவது செம்ம செம்ம . இதில் கவனிக்க வேண்டிய வேறொரு விஷயம் இது போன்றதொரு கதாபாத்திரத்தை வேறு எந்த நடிகர் செய்தாலும் நம்மால் இந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியாது என்பதே .. எதிரிகளுக்கு பயந்து நடுங்கும் நடிகராக சல்மானோ , ரஜினியோ , விஜயோ எல்லாம் நடிக்க மாட்டார்கள் ( நடிக்க முடியாது )... அப்படி நடித்தால் ( ரன்பீர் , நம்ம ஆர்யா ) இறுதியில் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் படத்துடன் ஒட்டாது .. ஆனால் இது ரெண்டையும் சேர்த்து (ஒரே படத்தில் ) செய்ய முடிந்த ஒரே நடிகர் இந்தியாவிலேயே ஷாருக் மட்டுமே . அதுதான் நம்ம king khan .
தீபிகாவின் பாத்திரமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது . சும்மா ஆடிக்கும் அம்மாவாசைக்கும் வராமல் கதையுடன் பயணிகிறார் . சுதந்திரத்தை விரும்பும் ஜாலியான பெண் கிராமத்தில் ஒரு பெரிய தலைக்கு பிறந்ததால் முடங்கி கிடக்க வேண்டி வருகிறது . அதை எதிர்த்து அவர் போராடி ஓடிபோகும் போதும் கூட ஜாலியாக ஷாருக்கை கலாய்த்துக்கொண்டே இருக்கிறார் . அவருடைய அந்த பாசிடிவ் attitude படத்தை என்டேர்டேயினிங் ஆக வைக்க பெரிதும் உதவுகிறது .
படத்தின் அடுத்த ப்ளஸ் எங்கும் நிக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும் திரைக்கதை . லாஜிக் சறுக்கல்களை ரசிகர்களின் அளவிற்கு கூட சட்டை செய்யாமல் அடுத்து அடுத்து என்று பாய்ந்து சென்று கொண்டே இருக்கிறது .
படத்தின் மைனஸ் பாயிண்டுகள் நிறைய. வேகமான திரைக்கதையுடன் ஒன்ற வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் தென்னகத்தின் புவியியலை பற்றி கொஞ்சமும் தெரியாதவராக இருக்க வேண்டும் . ஒரு இடத்தில் கூட படத்தின் கதைக்களம் ஒரு தமிழக கிராமம் என்று நம்ப முடியவில்லை .
படத்துடன் ஒன்ற வேண்டுமெனில் உங்களுக்கு தமிழும் தெரிந்திருக்க கூடாது . தீபிகாவும் அவரது சொந்தங்களும் பேசும் தமிழ் நிஜமாகவே கடுப்பை வரவழைக்கிறது . பெரிய தல உட்பட எல்லா கதாபத்திரங்களையும் ஹிந்தி நடிகர்கள் செய்திருந்தால் கூட எல்லாருடைய தமிழும் synchronize ஆகி இருக்கும் , ஆனால் இங்கே ஒரு பக்கம் சத்யராஜ் " என்னம்மா கண்ணு ", "அட எழவு " என்று பிச்சு எடுக்க மத்த நடிகர்கள் தமிழையே பிச்சு எடுக்கிறார்கள் . தென்னிந்தியரான ரோஹித் ஷெட்டியே இதில் கோட்டை விட்டிருப்பதுதான்
வருத்தம் .
சத்யராஜின் கதாபாத்திரம் இன்னும் strong ஆக அமைக்க்கபட்டிருக்க வேண்டும் .. அப்படி இல்லாததால் கடைசி வரை வில்லன் மீது பயமும் வரவில்லை இறுதியில் அவர் எடுக்கும் முடிவால் சந்தோஷமும் வரவில்லை.
படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தின் technical side .. அதை சொல்ல தேவை இல்லை . படம் பார்த்தால் உங்களுக்கே புரியும் . (முக்கியமாக ஆர்ட் டைரக்ஷன் )
பாடல்கள் ஓன்று கூட மனதில் நிற்காதது அடுத்த மைனஸ் . பின்னணி இசை கூட பரவாயில்லை ரகம் தான் .
லுங்கி டான்ஸ் நிச்சயமாக தமிழர்களை கவர வைக்கப்பட்டுள்ளது தான் . ஆனால் படம் முழுவதையும் ஹிந்தி ரசிகர்களுக்காக எடுத்து விட்டு கடைசியில் ஒரு லுங்கி டான்சை திணித்தது சற்றும் போணி ஆகவில்லை .. நிஜமாகவே தமிழர்களை கவர கொஞ்சமாவது தமிழகத்தை பற்றி கொஞ்சமாவது ground work செய்திருக்கலாம் .
ஒரு நல்ல என்டர்டைனர் படம் தான் . கொஞ்சம் திரைக்கதையிலும் நிறைய technical side லும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் பட்டய கிளப்பி இருக்கும் . ஷாருக் , மற்றும் கமர்ஷியல் பட ரசிகர்கள் நம்பி படம் பார்க்க போகலாம்.
No comments:
Post a Comment