Friday 20 September 2013

VARUTHAPPADAATHA VAALIBAR SANGAM - NO SADNESS YOUNGSTER ORGANISATION

 


  படத்திற்குள் போகும்முன் ஒரு சின்ன rewind .. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது ..

    "இந்த படம் தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகும்னு எல்லாம் சொல்லல.. எப்பிடியாவது நாங்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு போயிடணும்னு ஒரு படம் எடுத்திருக்கோம் .. அவ்வளவு தான் ..."

    எனக்கு என்னமோ சரிதான்னு படுது
    இதுக்கப்புறம் சிவகார்த்திகேயன் , சூரியோட மார்கெட் உயரும் , ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய வாய்ப்புகள் வரும் , பொன்ராமை நம்பி நிறைய தயாரிப்பாளர்கள் பணம் போடுவார்கள் .. எல்லாம் நடந்தால் நல்லது தான் .. வாழ்த்துக்கள் ..
    கௌரவமே பெரிசு என்று வாழும் சிவனாண்டி (சத்யராஜ்). எதற்குமே வருத்தபடாத வாலிபர் போஸ் பாண்டி (சிவகார்த்திகேயன்) சிவனாண்டியின் மகள் லதாபாண்டி (ஸ்ரீதிவ்யா)வை காதலித்தால் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை ..
     படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது ராஜேஷின் வசனம் . வசனம் என்பதை விட காமெடி என்றே சொல்லலாம் .. அதுதான் சரியாக இருக்கும் . ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை பற்றி பெரிதாக சிந்திக்க விடாமல் நம்மை கடத்தி செல்வதில் இந்த காமெடிகள் பெரும் பங்கு விகிக்கின்றன . ஏனென்றால் படத்திர்க்கென்று பெரிதாக கதை ஒன்றும் இல்லை , ஆனால் அதற்க்கான தடம் தெரியாமல் காமெடி மூலம் நம்மை நகர்த்தி செல்கின்றனர் . உண்மையில் இந்த படத்தில் டாஸ்மாக் காட்சிகளும் சந்தானமும் இருந்திருந்தால் பக்கா ராஜேஷ் எம்மின் படம் போலவே இருந்திருக்கும் ( என்ன ஒளிப்பதிவும் இசையும் இன்னும் கொஞ்சம் கூட நன்றாக இருந்திருக்கும் ).
     இரண்டாவதாக படத்தில் எனக்கு பிடித்த விஷயம் பொன்ராமின் திரைக்கதை . இவ்வளவு மொண்ணையான கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதையை நீட்டி சென்றிருப்பது பாராட்டப்பட வேண்டியது தான் . கதைப்படி சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யாவை காதலித்து சத்யராஜின் போலி கவுரவ வேஷத்தை உடைக்க வேண்டும் . அவ்வளவே... இப்படிப்பட்ட கதைக்கருவை வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தால் படம் ஆரம்பித்தது கொஞ்ச நேரத்திலேயே திசை மாறிய கப்பலாக படம் அலுக்கத்தொடங்கி விடும் .
     ஆனால் இங்கே இந்த கதையை தாண்டியும் ஏராளமான காமெடி கோட்டிங் பூசப்பட்ட காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . பிந்து மாதவியினுடனான ஒரு தலை ராகம் , சூரியின் காதல் , "நான் கடவுள்" ராஜேந்திரனின்  பகை , சத்யராஜின் துப்பாக்கி , கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்றுவது , ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்ற காட்சிகளால் நாம் அறியாமலேயே கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது (" வருத்தப்படாத வாலிபர் சங்கம் "  கூட இந்த லிஸ்டில் சேரும் சம்பவம் தான் ) . இப்படி நாம் அறியாமலேயே ஒரு கதை திரையில் நகர்ந்து கொண்டு இருப்பதாலோ என்னமோ படம் போரடிக்கவில்லை ( பொதுவாக ராஜேஷ் எம்மின் எல்லா படங்களும் இதே பாணியில் தான் நகரும் . அதிலும் பாஸ்[எ] பாஸ்கரன்  படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் )
       அடுத்ததாக படத்தில் பிடித்தது இமானின் இசையில் பாடல்கள் . படமாக்கப்பட்ட விதத்தில் பெரிசாக ஒன்றும் இல்லை என்றாலும் கேட்க நன்றாக இருக்கின்றது . " ஊதா கலரு ", " பாக்காதே " போன்ற பாடல்கள் ரொம்ப பிடித்தது .
       படத்தின் ஆகப்பெரிய குறை இவ்வளவு மொண்ணையான கதைக்கரு . படத்தின் எல்லா குறைகளும் இதற்குள்ளேயே அடங்கி விடும் . கதைக்கரு மொன்னையானதாலேயே "சத்யராஜ் - சிவகார்த்திகேயன் " என்ற அருமையான கூட்டணி வீணடிக்கப்பட்டிருக்கிறது . சிவா , சத்யராஜ் , சூரி , ராஜேந்திரன் என யாருக்குமே அவர்கள் திறமைக்கான பாதி தீனி கூட கொடுக்கப்பட வில்லை . அதனாலேயே பின்னணி இசை , ஒளிப்பதிவு போன்ற விஷயங்களுக்கும் பெரிதாக சோபிப்பதர்க்கான வாய்ப்பு இல்லை .
      இருந்தாலும் நல்ல படம் .. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது . குடும்பத்துடன் பார்ப்பது நலம் . குழந்தைகளும் , வயசானவர்களும் நிச்சயமாக ரசிப்பார்கள் 

No comments:

Post a Comment