Sunday 28 July 2013

GILLI - KAPADI KAPADI KAPADI

      
        ரொம்ப நாளைக்கு பிறகு சூர்யா டீவியில் கில்லி படம் பார்த்தேன். நான் தியேட்டரில் பார்த்து மிகவும் ரசித்த படம் என்றால் அது கில்லி தான் . ஸோ கில்லி பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தோன்றியது . 
       2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , என் அக்கா 10த் முடித்து விட்டு  +1ற்கு  தாராபுரம் st.aloysius பள்ளியில் சேர்ந்து இருந்தார். அக்காவின் முதல் ஹாஸ்டல் அனுபவம் . அக்காவை பள்ளியில் விட்டுவிட்டு வெளியில் உட்கார்ந்திருந்த பொது நானும் அம்மாவும் ஒரே அழுகை . அம்மா அக்காவிற்காகவும் நான் கில்லி படம் பார்பதற்காகவும். கொஞ்சம் நேரத்தில் அப்பா படம் பார்க்க கூட்டி சென்றார் . அது ஒரு டப்பா  தியேட்டர் , சரியாக பராமரிக்க படாமலும் இருந்தது . அம்மாவிற்கு தியேட்டருக்கு வரவும் பிடிக்கவில்லை , அந்த தியேட்டரும் பிடிக்கவில்லை. 
       அந்த வயதில் கில்லி எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது . ஆனால் இன்று யோசித்தது பார்க்கும் போது படத்ததை பற்றின வேறு ஒரு பார்வை கிடைத்தது . நாம் மிகவும் ரசித்த ஒரு படத்தை பல நாட்களுக்கு பின் பார்த்தால்  கொஞ்சம் மொக்கையாக தோன்றும் , ஆனால் கில்லி விஷயத்தில் அப்படி இல்லை , அன்று எந்த ஆர்வத்துடன் பார்த்தேனோ இன்றும் அதே உற்சாகத்துடன் ரசித்தேன் . காரணம் அன்று புரியவில்லை , இன்று புரிகிறது .



 
       படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட் பாத்திர படைப்புகள்  . 
       சரவணா வேலு , படிப்பில் ஆர்வம் இல்லாமல் கபடி விளையாடி திரியும் பய்யன் . அநியாயம் நடப்பதை கண்டால் கோபப் படுவான் , இருந்தாலும் எல்லாவற்றையும் புத்திசாலித்தனத்துடனும் ஜாலியாகவும் எதிர்கொள்ளுவான் . இந்த குணாதிசயங்கள் கடைசி வரை விஜயின் கதாபாத்திரத்தில்  பிரதிபலிக்கும் . உள்ளூர் கபடி டீம் முதல் பிரகாஷ் ராஜ் வரை தன்னை சீண்டுபவர்களிடம் எல்லாம் கோபப்படுவார், ஆனால் அப்பாவை பார்த்தால் பம்முவார் . தனலட்சுமி மீது தான் எடுத்துக்கொண்ட  responsibility காரணமாக அவருக்கு வேண்டியது எல்லாம் செய்வார் ஆனால் கோபப்பட வேண்டியபோது கோபப்படுவார் . 
       தனலட்சுமி கதாபாத்திரமும் அப்படியே ... சந்தோஷமாக வாழும் பெண் . தன்  குடும்பத்துடன் இருந்த பொது ஜாலியாக இருப்பார். பிரகாஷ் ராஜால் பிரச்சனை வந்த பிறகு அவருக்குள் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும் . விஜய் வீட்டின் சூழ்நிலை பிடித்தவுடன் பழைய துறுதுறுப்பு வந்து விடும் . 
       முத்துப்பாண்டி கதாபாத்திரம் படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஓன்று 
படத்தின் மற்ற கதாபாத்திரங்களை விட முத்துப்பாண்டி கதாபாத்திரம் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும் . பிரகாஷ் ராஜை பார்த்து நாம் படம் நெடுக சிரித்துக்கொண்டு இருப்போம் , ஆனால் பிரகாஷ் ராஜ் செய்யும் வில்லத்தனம் சீரியஸாகத்தான் இருக்கும் . முக்கியமான தருணங்களில் தனலட்சுமி முத்துப்பாண்டியிடம் மாட்டி விட கூடாது என்ற பரபரப்பு நமக்குள் இருக்கும் . ஆனால் முத்துப்பாண்டி திரையில் தோன்றி விட்டால் நாம் குதூகலமாகி விடுவோம் . பிரகாஷ் ராஜின் நடிப்பும் இதற்கு ஒரு காரணம் , அவர் தவிர வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு effect வந்திருக்காது.
       மற்ற கதாபாத்திரங்கள் கூட நூல் பிடித்தாற்போல் அமைக்க பட்டிருக்கும் .
விஜய் தன அம்மாவை பற்றி 

       "அப்பாவுக்கு தெரியாம நிறைய துட்டு கொடுப்பாங்க , ஆனால் என்ன விட்டு மட்டும் கொடுக்க மாட்டாங்க"

        என்று சொல்லுவார், அதே போல் விஜய் வீட்டிற்கு ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வரும்போது கூட அம்மா கோபபட மாட்டார். விஜய்யின் அப்பா கதாபாத்திரமும் அந்த விறைப்பான சுபாவத்தை கடைசி வரையில் விடாது . விஜய் 5ம் வகுப்பில் fail ஆவது முதல் டிகிரி அரியரை சொல்லி திட்டுவது வரை அந்த விறைப்பு அப்படியே இருக்கும் . அவர் துடிப்பான நேர்மையான அதிகாரி என்றும் படத்தில் காட்டபட்டிருக்கும் , அதற்க்கு ஏற்றவாறு தான் தேடும் குற்றவாளி தன மகன் தான் என்று தெரிந்த பிறகு கூட அவர் முகத்தில் எந்த சலனமும் இருக்காது , குற்றவாளியை பிடிக்க வேண்டுமே என்ற முனைப்பு மட்டுமே இருக்கும் . விஜயின் தங்கை கதாபாத்திரத்தை நமக்கு எல்லோருக்கும் பிடித்திருக்கும். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துனராக வந்த போது கூட அனைவரும் கில்லியின் பெயரை சொல்லியே அவரை அடையாளம் கண்டு கொண்டோம் . ஆரம்பம் முதல் அண்ணனோடு சண்டை போட்டு விட்டு , கடைசியில் அப்பாவிடம் அண்ணனுக்காக உருகி உருகி பேசுவார் . அவர் என்ன தான் சண்டை போட்டாலும் பிரச்சனை வரும்போது அண்ணனை விட்டு கொடுக்க மாட்டார் என்பது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் . எப்படியென்றால் , ஒரு காட்சியில் தன வீட்டில் ஒரு பெண் அண்ணனால் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்த போதும் அண்ணனை மாட்டி விட மாட்டார் . அதே போல அண்ணனின் காதலை கண்டு சந்தோஷ படுவார், பெரும்பாலான தங்கச்சிகள் அப்படித்தானே . மயில்சாமி - எப்போதும் தண்ணி அடித்துக்கொண்டு இருப்பார் , விஜயின் லோக்கல் ரசிகன், கடைசி வரை விஜயை ஹீரோவாகவே பார்ப்பார் . விஜயின் நண்பர்கள் கூட நம் நிஜ நண்பர்களை ஞாபகப்படுத்துவார்கள் , ஒரு உதாரணம் , கிளைமாக்ஸில் நாகேந்திர பிரசாத் விஜயிடம் கோபப்படுவார் . 
       " என்னமோ பெருசா  உடல் பலத்த விட மன பலம் தான் முக்கியம்னு பேசுன , இப்போ என்னடா ஆச்சு "
       " என் மனசே என்கிட்டே இல்லாடா "
         உடனே தோல்வியை மறந்து விட்டு விஜயின் காதலுக்காக கவலை பட தொடங்கி விடுவார் . அதுதானே நண்பர்கள் .....
       படத்தை அத்தனை சுவாரசியமாக்கியது திரைக்கதை தான் என்று எல்லோருக்கும் தெரியும். பெரும்பாலான கமர்சியல் படங்களில் " commercial aspects/ commercial elements" என்ற பெயரில் படத்திற்கு சம்பந்தம் இல்லாத காட்சிகளை   காட்டு காட்டு என்று  காட்டி  விடுவார்கள்  . எந்த தேவையும் இல்லாமல் பாட்டு வரும் . ஒரு காமெடியன் வந்து காமெடி மாதிரி ஏதேதோ செய்வார் . கரணம் தப்பினால் மரணம் என்று வைக்கப்படும் இப்படிப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் படத்திற்கு speed breakerகளாக அமைந்து விடுவதுண்டு . ஷங்கர் , ஹரி போன்ற வெகுசில இயக்குனர்களே இதில் பெரும்பாலான  நேரங்களில் ( எல்லா நேரங்களிலும் இல்லை ) வெற்றி பெறுகிறார்கள் , ஆனால் கில்லி படத்தில் ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரத்தை விளக்கவோ , கதையை நகர்த்தவோ மட்டுமே பயன் படுத்த படுகிறது .
       பாடல்கள் கூட கதையுடன் சேர்ந்தே வருகிறது 
       கபடி போட்டி வெற்றியின் கொண்டாட்டமே " சூரத்தேங்காய் அட்றா அட்றா " பாடல் 
       தனலட்சுமி கதாபாத்திரத்தின் நிலையை விளக்குவதே " ஷல்லல்லா " பாடல் . அந்த பாடலின் இரண்டாம் சரணத்தின் முடிவில் " யாரவனோ ... யாஆஆரவ் வ்வனோஓ ....." என்று பாடும் போது விஜய் நண்பர்களுடன் ஆற்றில் குதிக்கும் காட்சி காட்டபடுகிறது  . 
       "அர்ஜுனரு வில்லு பாடல் " ஒரு கதாநாயக வழிபாட்டு பாடல் .  ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்து தனலட்சுமியை மீட்டு கொண்டு வந்தவரை பற்றி தாராளமாக " கதாநாயக வழிபாட்டு" பாடல் பாடலாம் . பட தொடக்கத்திலேயே கதாபாத்திரத்தை சற்றும் மனதில் கொள்ளாமல் அந்த நடிகரை மட்டுமே மனதில் வைத்து பாடப்படும் பாடலை விட நிஜமாகவே ஹீரோயிசம் காட்டி விட்டு பாடுவது உறுத்தவில்லை . 
       தனலட்சுமியின் பிறந்த நாள் கொண்டாட்ட பாடல் " கொக்கர கொக்கர கோ"
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . கதை சொல்லவும் இந்த பாடல் பயன் படுத்த பட்டிருக்கும் . அண்ணனும் தனலட்சுமியும் தலையை இடித்துக்கொண்டு சிரிக்கும் போது புவனா (தங்கை) "கண்ணனுக்கு வள்ளிய போல" என்று பாடத்தொடங்குவார் . புவனாவிற்கு தனலட்சுமியை பிடித்து விட்டது என்று இந்த வரிகள் சொல்லுகிறது . தனலட்சுமி பிரிந்து போகும் பொது தானும் சேர்ந்து அழுது, அண்ணனை திட்டுவது போல கடைசியில் ஒரு காட்சி வரும் . அந்த காட்சியை உறுதி படுத்த இந்த பாடல் வரிகள் உதவி புரிகிறது . எந்தவொரு பெண்ணும் ஆணிடம் இருந்து  ஒருsecured feelஐ எதிர்பார்ப்பாள் . முத்துபாண்டி மூலம் பறிபோகும் அந்த secured feel விஜய் மூலமாக திரும்ப கிடைக்கிறது . அப்போது மீண்டும் அவளுக்குள் ஒளிந்து இருக்கும் சந்தோஷமும் துறு துறுப்பும் வெளியே வருகிறது , அது கூட இந்த பாடலில் த்ரிஷா பாடும் வரிகளில் வெளிப்படுகிறது .
       கடைசியில் த்ரிஷாவிற்கு விஜய் மீது உறுதியாக காதல் வந்து விட்டது என்னும் இடத்தில் "அப்படி " போடு பாடல் . கதையுடன் சேர்ந்தே வந்தாலும் கதையை தாண்டியும் ரசிக்க வைத்த பாடல் . 
       வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட் , எனக்கும் பிடித்து இருந்தது . ஆனால் பாடல்களை விட பின்னணி இசை மிகவும் கவர்ந்தது 
        மாநகரங்களுக்கு என்று ஒரு பவர் உண்டு ... அதை உணர்ந்திருக்கிறீர்களா ??? தமிழர்கள் என்பதால் சென்னையை எடுத்துக்கொள்வோம் . சென்னைக்கென்று ஒரு பவர் , ஒரு ஈர்ப்பு உண்டு அதை உணர்ந்திருக்கிறீர்களா???   
        "கிராமம் மாதிரி வருமா...? தாமிரபரணி தண்ணி மாதிரி வருமா...? மதுர மல்லி வாசம் மாதிரி வருமா ... ? என்றெல்லாம் பீத்திக்கொண்டாலும் எதுவுமே சென்னைக்கு ஈடாகாது . வெறும் பணம் சம்பாதிக்கும் இடம் மட்டுமாக இருந்தால் ஒரு கோடி மக்கள் இந்த சின்ன வட்டத்திற்குள் வாழ மாட்டார்கள் , அதையும் தாண்டி சென்னைக்கு ஒரு புத்துணர்வு உண்டு, சென்னையை நினைத்தாலே அந்த புத்துணர்வு நமக்குள் ஒட்டிக்கொள்ளும் .
          இதை ஏன் சொல்கிறேன் என்றால் "அப்படி போடு பாடலுக்கு முன் விஜய் த்ரிஷாவிடம் சொல்வார் . 
  இடம் : லைட் ஹவுஸ் உச்சி 
  நேரம் : இரவு 
           " இங்க இருந்து பார்த்தால் ஊரே நமக்கு தெரியும் , ஆனா நாம இங்க இருக்குறது யாருக்கும் தெரியாது . பவுர்ணமி அன்னிக்கு இங்க இருந்து பாத்தா கடல் எப்படி இருக்கும் தெரியுமா...??"
           என்று சொல்லிக்கொண்டே " ஊ ஊ ... " என்று கத்துவார் . நைட் effectல் சென்னையை காண்பிப்பார்கள் . அப்போது வித்யாசாகர் ஒரு ம்யூசிக் போடுவார் பாருங்க ... சூப்பர் ... ( சென்னை பற்றின அந்த புத்துணர்வு எனக்குள் வந்து செல்லும்   ) அடுத்தடுத்த காட்சிகளில் அதே லைட் ஹவுசில் இருந்து கொண்டு த்ரிஷா விஜயை பார்த்து "நான் இங்க இருந்து போறதில் உனக்கு கொஞ்சம் கூட feeling இல்லையா??? " என்று கேட்பார். பின்னணியில் அதே இசை . அப்போது நமக்கே த்ரிஷா அந்த ஊரை விட்டு செல்வது பற்றி feel ஆகி விடும் ... இது போல வித்யாசாகரின் பின்னணி இசை பல இடங்களில் நம்மை உணர்வு ரீதியாக வேறு தளத்திற்கு கொடு சென்று விடும் . 
           படத்தின் ஆர்ட் டைரக்ஷன் எனக்கு மிகவும் பிடிக்கும் "டி . மணிராஜ் " என்று நினைக்கிறேன். விஜய் வீட்டில் த்ரிஷாவை ஒளித்து வைத்திருக்கும்போது "இது சாத்தியமா " என்ற கேள்வி எழாமல் இருப்பதற்கு ஆர்ட் டைரக்ஷனும் ஒரு காரணம் . 
           வெறும் ஆக்ஷன் படம் என்றில்லாமல் உணர்வு ரீதியாக அணுகியதே கில்லியை இப்போது ரசிக்க வைக்கிறது 
            படம் முடிந்து வீட்டிற்கு செல்ல 5 மணி நேரம் பேருந்து பயணம் . அம்மா ஒரு முறைக்கூட அக்காவை நினைத்து அழவில்லை .... அது தான் கில்லி 

No comments:

Post a Comment